Home இலங்கை மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பயணம்!

மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பயணம்!

by admin
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றைய தினம் சனிக்கிழமை (12.04.25) மதியம் மன்னாருக்கு பயணம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்,தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.தேசிய மக்கள் சக்தியின் நானாட்டான் பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்து நேற்றைய தினம் சனிக்கிழமை 12.04.25) மதியம் நானாட்டான் பிரதான மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம் பெற்றது.

இதன் போது தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  மா.ஜெகதீஸ்வரன்,செ.திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து உரை நிகழ்த்தினர்.

இதன் போது பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமரின் நானாட்டான் பகுதிக்கான பயணத்தையொட்டி நானாட்டான் பகுதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More