Home இலங்கைவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி மீண்டும் கூடவுள்ளது…

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி மீண்டும் கூடவுள்ளது…

by admin

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூட உள்ளதாக செயலணியின் செயலாளர் எஸ். சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார் எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளும் தடைப்பட கூடாதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More