Home பிரதான செய்திகள் அன்டி முர்ரே ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு

அன்டி முர்ரே ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு

by admin


பிரித்தானிய வீரர் அன்டி முர்ரே ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 14-ம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஆரம்பமாகவுள்ள் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருடன் ஓய்வுபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அன்டி முர்ரே அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்தான் தனது கடைசி தொடராக இருக்கும் என கருதுவதாக தெரிவித்துள்ள அவர் இடுப்புபகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது சொந்த நாட்டில் நடைபெறவுள்ள விம்பிள்டன் தொடருடனேயே ஓய்வு பெற விரும்புகின்ற போதிலும் நீண்ட காலமாக வலியால் சிரமப்படுவதனால் அந்த வலியுடன் அடுத்த 5 மாதங்களுக்கு விளையாட முடியும் என தன்னால் உறுதியாக கூற முடியாது எனவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More