Home இலங்கைபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகருடன் கடற்படை தளபதி சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகருடன் கடற்படை தளபதி சந்திப்பு

by admin

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேணல் டேவிட் அஷ்மானுக்கும் இலங்கை கடற்படை தளபதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவுக்குமிமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கடற்படை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இச்சந்திப்பில் கலந்து கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி விடைபெற்றுச் செல்லும் குறூப் கப்டன் ப்ரேசர் நிக்கல்சன் தனது கடமைக் காலத்தில் இலங்கை கடற்படை வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More