Home இலங்கை காசு பிணக்கு – அண்ணன் – தம்பி மோதல் – அண்ணன் பலி

காசு பிணக்கு – அண்ணன் – தம்பி மோதல் – அண்ணன் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


காசு பிணக்கு காரணமாக அண்ணன் , தம்பி மோதிக்கொண்டதில் அண்ணன் உயிரிழந்துள்ளதுடன் தம்பி கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.பருத்தித்துறை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் நெல்லியடி வதிரி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான சிறிரங்கநாதன் சுதாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

குறித்த சகோதரர்கள் இடையில் காசு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீண்டகாலமாக பிணக்கு நிலவி வந்துள்ளநிலையில் நேற்றைய தினம் இரவு இருவருக்குமிடையில் காசு பிணக்கு வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது.

வாய் தர்க்கம் கைக்கலப்பாக மாறிய போது தம்பி மீது அண்ணன் கத்தியால் குத்திய நிலையில் , அண்ணன் மீது தம்பி கொட்டனால் தாக்கியுள்ளார். கொட்டன் தாக்குதலுக்கு இலக்கான அண்ணன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான தம்பி மந்திகை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More