Home இலங்கைஅநுராதபுரத்தில் உள்ள கம்பனிக்காக கற்றாளைகளை பிடுங்கிய ஐவர் கைது

அநுராதபுரத்தில் உள்ள கம்பனிக்காக கற்றாளைகளை பிடுங்கிய ஐவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


அநுராதபுரத்தில் உள்ள கம்பனி ஒன்றுக்காக பொன்னாலையில் கற்றாளைகளைப் பிடுங்கிய இரு பெண்கள் உட்பட ஐந்து பேரை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். . கடந்த வாரம் வலி.மேற்கு பிரதேச சபையின் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா, அராலி வட்டார உறுப்பினர் எஸ்.இலங்கேஸ்வரன் ஆகியோர் பொன்னாலையைச் சேர்ந்த ஒருவரி உதவியுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த நால்வரை மடக்கிப் பிடித்து கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் இரு பெண்கள் உட்பட ஐவர் கற்றாளைகளைப் பிடுங்கியதனை அவதானித்த வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் வட்டுக்கோட்டைப் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குறித்த நபர்களைக் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றதுடன் அவர்கள் பிடுங்கிய கற்றாளைகயும் எடுத்துச் சென்றுள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More