Home இலங்கை கிழக்குக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு :

கிழக்குக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு :

by admin

காணாமல்போனோரின் உறவினர்களால் ஒழுங்குசெய்யப்பட்டு கிழக்கு மாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்படும் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழ்மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இடம்பெற்றுவரும் ஐ.நா. சபையின் கூட்டத்தொடரில் நாளை 20ஆம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பில் பேசப்படவுள்ள நிலையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலளிக்கவும் வலியுறுத்துமாறு கோரும் விதத்தில் இக் கடையடைப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அனைவரதும் ஆதரவுகள் கோரப்பட்டிருந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More