Home இந்தியா சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களை, வறட்சி மாவட்டங்களாக ,தமிழக அரசு அறிவித்தது…

சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களை, வறட்சி மாவட்டங்களாக ,தமிழக அரசு அறிவித்தது…

by admin

சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, இது குறித்து நேற்று இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழையின் அளவு பகுப்பாய்வு செய்யப்பட்டபின் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் மிக பற்றாக்குறை என்ற அளவில் மழைப்பொழிவைப் பெற்றுள்ளன எனவும் அங்கு நிலத்தடி நீர் குறைந்திருப்பதால் கோடைக் காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும் என்பதனால் அவை வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்படுகின்றன என பகுப்பாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல மழைப்பொழிவைக் குறைவாகப் பெற்றுள்ள சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட 24 மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன எனவும் தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More