Home உலகம் டமாஸ்கஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 14 பொதுமக்கள் பலி

டமாஸ்கஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 14 பொதுமக்கள் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

டமாஸ்கஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட்டின் இராணுவத்தினர், கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தியுள்ள இந்த தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் 14 பொதுமக்கள்; கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பரல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்களில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More