Home உலகம் நேபாளத்தில் வெள்ளம் – நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..

நேபாளத்தில் வெள்ளம் – நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..

by admin

நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் ல் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அத்துடன் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்ற நிலையில் இந்த கனமழை காரணமாக நேற்று வரை 28 பேர் பலியாகினர் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 24 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது என காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More