Home உலகம் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு

தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு

by admin


தனக்கெதிராகச் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தன்னை அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதனை இலக்காகக் கொண்ட சதி என, தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜாக்கோப் சூமா தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஒருவர் தலைமையிலான விசாரணைக்குழுவின் முன்னால் முதல்தடவையாக முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

சர்ச்சைக்குரிய குப்தா குடும்பத்துடன் அவர் பேணி வந்த நட்புறவை முன்னிறுத்தியே, ஜாக்கோப் சூமா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

குப்தா குடும்பத்தினர் அமைச்சரவை நியமனத்திலும் தேர்தல் வெற்றிகளிலும் ஊழல் மூலம் ஆதிக்கம் செலுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #குற்றச்சாட்டுக்கள்  #அரசியல்  #ஓரங்கட்டுவதற்கான #தென்னாபிரிக்கா #ஜாக்கோப் சூமா # jacob-zuma

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More