Home இலங்கைசெட்டிக்குளம் பெரியகட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா எதிர்வரும் 4 ஆம் திகதி

செட்டிக்குளம் பெரியகட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா எதிர்வரும் 4 ஆம் திகதி

by admin

மன்னார் மறைமாவட்டம் செட்டிக்குளம் பெரியகட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா கடந்த 26 ஆம் திகதி மாலை பங்குத்தந்தை எஸ்.செபமாலை அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து நவ நாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தியாவில் இருந்து வருகை தரும் அருட்தந்தை இக்னேசியஸ் அடிகளாரின் சிறப்பு வழிபாடுகள் மற்றும் குணமாக்கல் வழிபாடுகளும் இடம் பெறும்.

எதிர் வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பி.ல.இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது என செட்டிக்குளம் பங்குத்தந்தை எஸ்.செபமாலை அடிகளார் மேலும் தெரிவித்தார். #மன்னார் #செட்டிக்குளம் #அந்தோனியார் #திருவிழா

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More