Home இலங்கை நீராவியடி விகாரைக்கு புதிய விகாராதிபதி

நீராவியடி விகாரைக்கு புதிய விகாராதிபதி

by admin

மயூரப்பிரியன்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவிடியடிப் பிள்ளையார் ஆலய சுழலில் அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விகாரைக்கு புதிய விகாராதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கடந்த 21ஆம் திகதி காலமானார். இந்த நிலையில் கடும்போக்கு பௌத்த பீடமான அமரபுர நிக்காயவால் புதிய விகாராதிபதி கடந்த 28ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மலைக் கிராமமான மிகிந்தபுர என்ற இடத்தைச் சேர்ந்த ரத்தன தேவ கீர்த்தி என்ற பௌத்த பிக்குவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆசிரியர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நியமனம் வழங்கப்பட்டு ஒருவாரமாகியும் அவர் நீராவியடி விகாரைக்கு இன்னும் வரவில்லை என்று காவல்துறையினர்தெரிவித்தனர். #நீராவியடி #விகாரை #விகாராதிபதி

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More