Home இலங்கை “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை – அவர்கள் யுத்தத்தில் இறந்துபோயினர்”…

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை – அவர்கள் யுத்தத்தில் இறந்துபோயினர்”…

by admin

இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் அனைவரும் யுத்தத்தில் இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் காணாமல் போனதாக கூறப்படுபவர்கள் இல்லையாயின்  அவர்கள் அனைவரும்  யுத்தத்தில் இறந்து விட்டதாகவே கருதப்படும்  என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. இருக்கும் முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமே தவிர இருக்கின்ற முகாம்களை அகற்ற எமக்கு எந்த நோக்கமும் இல்லை. அவ்வாறே காணாமலாக்கப்பட்டவர்கள் என எவருமே இல்லை. யுத்த காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப்புலிகளை புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்தில் இணைத்துள்ளோம்.  விடுவிக்கப்பட்டவர்களில் காணாமாலாக்கப்பட்டதாகக் கூறப்படும் அல்லது தேடப்படும் நபர்கள் இல்லை என்றால் அந்த நபர்கள் இறந்தவர்களாகவே கருதப்படும். அத்துடன் யுத்தத்தில் இறந்தவர்களில் எமக்கு கிடைத்த சடலங்களை செஞ்சிலுவை சங்கம் ஊடாக ஒப்படைத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More