இன்றைய தினம் இலங்கையில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 55 பேருக்கும் பேலியகொடை மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 259 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதகையடுத்து தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,105 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. #கொரோனா #இலங்கை #தனிமைப்படுத்தல் #பேலியகொடை #மீன்சந்தை