தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது, இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குள் வாள், கண்ணாடிப்போத்தல், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த எண்மர், அவரது மகனின் மீது தாக்குதளை மேற்கொண்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுக்கும் சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #சிவஞானம்சிறிதரன் #மகன் #தாக்குதல்