Home சினிமா பூம்பூம் மாட்டுக்காரருக்கு வாய்ப்பளித்த ஜி.வி.

பூம்பூம் மாட்டுக்காரருக்கு வாய்ப்பளித்த ஜி.வி.

by admin

சமூக வலைதளத்தில் வைரலான பூம்பூம் மாட்டுக்காரரின் திறமையைப் பார்த்து அவருக்கு ஜி.வி.பிரகாஷ். வாய்ப்பளித்துள்ளார்

சமூக வலைதளம் மூலம் வைரலாகி, திரையுலகில் பலரும் அறிமுகமாகி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் திருமூர்த்தி என்பவர் பாடிய பாடல் இணையத்தில் வைரலாக, அவருக்கு இசையமைப்பாளர் இமான் வாய்ப்பு வழங்கியிருந்தார்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவர் நாதஸ்வரம் வாசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அவர் வாசிக்கும் இசை மிகவும் அற்புதமாக இருந்ததால் பலரும் பகிா்ந்திருந்தாா்கள்.

அவரைத் தேடிக் கண்டுபிடித்தால், தன்னுடைய பாடல் பதிவுக்கு உபயோகப்படுத்திக் கொள்வேன். ரொம்ப திறமனையானவர், அழகாக வாசிக்கிறார் என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததனையடுத்து பலரும் அவருடைய பெயர் நாராயணன் என தொிவித்ததுடன் அவரது தொலைபேசி எண்ணையும் அனுபிபனிா்.

இதனையடுத்து நாராயணனைத் தொடர்பு கொண்டு ஜி.வி.பிரகாஷ் பேசியுள்ளாா். . பெங்களூருவில் இருக்கும் நாராயணன் கொரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் சென்னைக்கு வரவுள்ளதாகவும் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வரும் பிரம்மாண்ட படத்தின் இசைக்கு நாராயணனை உபயோகப்படுத்தவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More