இலங்கையில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், நாளாந்தம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு கிடைப்பதாக, குடிவரவு – மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி இ தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்க கிரீன் கார்ட் லொட்டரிக்காக, கடவுச்சீட்டுக்களைப் பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும், ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,800 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான சேவையின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,000 விண்ணப்பங்களும் பெறப்படுகின்றன.
இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முனைவோர் தொகை அதிகரிக்கிறதா?
102
Spread the love