Home இலங்கையாழ்.போதனாவில் வெளிநாட்டு பிரஜைகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கு 5ஆயிரம் ரூபாய் அறவீடு

யாழ்.போதனாவில் வெளிநாட்டு பிரஜைகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கு 5ஆயிரம் ரூபாய் அறவீடு

by admin

யாழ்.போதனா வைத்திய சாலையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்காக 5ஆயிரம் ரூபாய் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கைப் பிரஜைகள் மட்டுமே இலவச சுகாதார சேவைக்கு உரித்தானவர்கள். வெளிநாட்டு பிரஜைகள் தங்கள் மருத்துவ செலவுகளுக்காக உரிய கட்டணங்களை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு செலுத்தியே ஆகவேண்டும்.

இதன் அடிப்படையிலேயே வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கட்டணமாக 5000 ரூபா அறவிடப்படுகின்றது. இப் பணம் உரிய முறையில் அரசாங்கத்தின் கணக்கில் வைப்பிடப்படுகின்றது. 


யாழ்.போதனா வைத்திய சாலையில்  இச் சேவையைப் பெற்றுக் கொள்வோர் எதிர்மறை (negative) முடிவாயின் நேரடியாக விமானநிலையம் செல்லமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More