Home இலங்கை மாவடிச்சேனையில் புலிகளின் ஆவணங்கள் மீட்பு!

மாவடிச்சேனையில் புலிகளின் ஆவணங்கள் மீட்பு!

by admin

திருகோணமலை – ஈச்சிலம்பற்று காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகிதத்துக்கிடமான ஆவணங்கள் சில, நேற்று (09.03.22) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று காவற்துறையினர் தெரிவித்தனர்.

இப்புத்தகங்கள், விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதில் விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள், நிர்வாகம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் புத்தகங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று காவற்துறையினர் தெரிவித்தனர்.

காணி உரிமையாளர், நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக நிலத்தை பன்படுத்திக் கொண்டிருந்தபோது இந்த ஆவணங்கள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து, ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டதாகவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More