Home இலங்கைபிரிந்து நின்ற காலம் போதும்

பிரிந்து நின்ற காலம் போதும்

by admin

எதிர்க்கட்சி உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடா்ந்து நாடாளுமன்றத்தில் விசேட உரையபற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரிந்து நின்ற காலம் போதும் எனத் தொிவித்த அவா் , அனைவரும் ஒன்றிணைந்து புதிய நடைமுறை ஒன்றை உருவாக்க ஒன்றிணையுமாறு அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளாா்.

மேலும் தனது பதவிப்பிரமாணத்தை நாடாளுமன்றுக்கு வௌியில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More