முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று (02.08.22) காலை மன்னாருக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த திடீர் பயணம் குறித்து ரவி கருணாநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது எவ்வித பதிலும் கூறாமல் அவ்விடத்தில் வந்த வாகனத்தில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.
ரவி கருணாநாயக்கவுடன் T.S.F என அழைக்கப்படும் தனியார் கடல் உணவு உற்பத்தி நிலைய பிரதிநிதிகளும் சென்ற நிலையில், அவர்களின் வாகனத்திலேயே ரவி கருணாநாயக்க சென்றதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக கூறப்படுகிறது.