Home இலங்கை கிரிக்கட் மைதானத்தை பிடிக்க முடியாதவர்கள், நாடு பிடிக்க போகிரார்களாம்!

கிரிக்கட் மைதானத்தை பிடிக்க முடியாதவர்கள், நாடு பிடிக்க போகிரார்களாம்!

by admin

இலங்கை கிரிக்கட் சபையின் பல கோடி நிதியில் அமைக்கப்படும் சர்வதேச கிரிக்கட் மைதானம், வவுனியா ஈரப்பெரியகுளத்தில் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள விவசாய பண்ணைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத பகுதியை மைதானத்திற்கு வழங்குமாறு வவுனியா துடுப்பாட்ட சங்கம் வலியுறுத்திய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கும் எழுத்து மூலம் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இது தொடர்பில் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரப்பெரியகுளத்தில், பிரதேச செயலகத்தில் காணி ஒதுக்கப்பட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இதைவேளை ஓமந்தையில் காணி ஒதுக்கீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்ட போதிலும் இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காதமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More