Home இலங்கைபேசாலையைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்:

பேசாலையைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்:

by admin

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை  தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்

இலங்கை தமிழர்களை மணல் திட்டிலிருந்து மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மன்னார்; மாவட்டம் பேசாலையை  சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி, புலக்ஷன்,கணுவியா, சசிக்குமார், சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6  பேரே இவ்வாறு யாழ்ப்பாணத்தில் இருந்து   நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு படகில் புறப்பட்டு இன்று (17) காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல்; மணல் திட்டில் சென்றிறங்கியுள்ளனா். குறித்த 6 பேரும் விசாரணைக்கு பின்னா் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More