Home இலங்கை‘றொக்ஸ் ரீம்’ குழுவைச்சேர்ந்த செந்தூரன் – தனு – யாழில் மீண்டும் கைது:-

‘றொக்ஸ் ரீம்’ குழுவைச்சேர்ந்த செந்தூரன் – தனு – யாழில் மீண்டும் கைது:-

by admin

யாழில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பின்னர் யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இருவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பரவலாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ‘றொக்ஸ் ரீம்’ என அழைக்கப்படும் குழுவைச்சேர்ந்த செந்தூரன் மற்றும் தனு ஆகியோரே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் நேற்றையதினம் யாழ். நீதவான் நிதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டபோது குறித்த நபர்களை மார்ச் மாதம் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் யாழ். நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த 8 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன், அண்மையிலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தாவடிப்பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தார்கள் என பொதுமக்களால் அடையாளம் காண்பிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More