Home இலங்கை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை

by admin

கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ், மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் மாலை 5 மணி முதல் 06 மணி வரையிலான ஒரு மணி நேரமும் , சனிக்கிழமை சூரன் போர் அன்று மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 06 மணி வரையிலும் வீதி தடை போடப்பட்டு , வீதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கும்.
எனவே வீதியால் பயணிப்போர் அந்நேரங்களில் மாற்று வீதி ஊடாக தமது பயணங்களை மேற்கொள்ளுமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More