Home இலங்கை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு!

ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு!

by admin

செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு அறநிதியச் சபையால் நடாத்தப்பட்ட இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (02.06.24) தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் இடம்பெற்றது.

Exif_JPEG_420

இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் வைத்தியத் துறைக்கு அரும்பணியாற்றிய இதய சத்திரசிகிச்சை நிபுணர் ஞானச்சந்திரமூர்த்தி காந்திஜிக்கும் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த திருகோணமலை இந்துக்கல்லூரி மாணவன் ஹரிகரன் தன்வந்திற்கும் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

Exif_JPEG_420

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More