188
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தி, எமக்கு விரைவில் தீர்வினை பெற்று தராது விட்டால் நாங்கள் நாடாளுமன்றை முற்றுகையிட்டு போராடுவோம் எனவும் அறிவித்துள்ளனர்.
Spread the love