Home இலங்கை சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு!

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு!

by admin

இலங்கையில்  60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி வீதத்தை 10 சதவீதமாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், வைப்புத்தொகைக்கான தற்போதைய 7.5சத வட்டி வீதம் 2.5சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்படும் வட்டி வீதத்தை அரச வங்கிகளுக்கு மானியமாக வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் அதிகபட்சம் ஒரு மில்லியன் ரூபாய் வரையான நிலையான வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு 10 சதவீதமாக வழங்கப்பட உள்ளது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More