Home இலங்கை கடத்தலில் ஈடுபட்ட 25 டிப்பர்கள் ஒரேநாளில் கைப்பற்றப்பட்டன!

கடத்தலில் ஈடுபட்ட 25 டிப்பர்கள் ஒரேநாளில் கைப்பற்றப்பட்டன!

அவற்றின் சாரதிகளும் கைது!

by admin

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்களை கடத்தி சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் – மன்னார் நெடுஞ்சாலை வழியாக தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்கள் டிப்பர் வாகனங்களில் கடத்தி செல்லப்படுவதாக காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தொடர் முறைப்பாடுகளை அடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை (29.08.24) கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி காவற்துறையினர் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

அதன் போது , உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி மணல் கடத்தி வந்த 24 டிப்பர் வாகனங்களும் , மரங்களை கடத்தி வந்த ஒரு டிப்பர் வாகனமும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களை காவல் நிலையங்களில் தடுத்து வைத்துள்ள காவற்துறையினர் , அதன் சாரதிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More