Home இலங்கை முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வடக்கின் ஆளுநராக பதவி ஏற்கவுள்ளார்!

முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வடக்கின் ஆளுநராக பதவி ஏற்கவுள்ளார்!

by admin

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த பி.எஸ்.எம். சார்லஸ் கடந்த 23ஆம் திகதி தனது பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து  வடக்கு மாகாண ஆளுனராக முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே  முன்னைய ஆட்சியில்  சில அரசியல் தலையீடுகள் காரணமாக  இடைநடுவேபதவி விலகியிருந்தார்.

இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை வழங்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தரப்பு முன்வந்தமையால் வேதநாயகன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஆளுநராகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More