முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாா். BMW கார் ஒன்று தொடர்பில் சட்டங்களை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதனையடுத்து அவரை வாக்குமூலம் வழங்குமாறு அறிவிக்கப்பட்ட போதும், அவர் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் குருநாகல் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி தான் வாக்குமூலம் வழங்கத் தயார் என ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்திருந்த நிலையில், இன்று காலை முன்னிலையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது