Home இலங்கை மட்டக்களப்பு நீதிமன்றை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக  அச்சுறுத்தல்

மட்டக்களப்பு நீதிமன்றை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக  அச்சுறுத்தல்

by admin

 

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக  நீதிமன்ற பதிவாளருக்கு நேற்று வியாழக்கிழமை (24) இரவு  வந்த தொலைபேசிஅழைப்பை அடுத்து  குறித்த     அப்பகுதியை   காவல்துறை  உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் கட்டித்தை சுற்றிவர பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த பகுதியில் விசேட  காவல்துறையினா்  ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனா்.  மேலும்   இன்று வெள்ளிக்கிழமையில் இருந்து இந்த பகுதியில்  விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பில் சீயோன் தேவலாய தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட ஸாரான் காசிம் மற்றும்  ஜ.எஸ்.ஜ.எஸ் என சந்தேகிக்கப்படும் பலரது  வழக்குகள்  இந்த நீதிமன்றில்  இடம்பெற்றுவருகின்றதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதியினே்  களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More