வாகரை வாணன் அவர்கள் தமிழ் அறிவும் தமிழ் உணர்வும் மீதுரப்பெற்ற பெரும் ஆளுமை. தோற்றத்தில் எளிமையும், அறிவில் ஆழமும் செயற்பாட்டில் இடையறா உக்கிரமும் கொண்ட, ஒருபொழுதும் தளராத நெஞ்சம் உணர்வும் கொண்ட அறிவாளன்.
தமிழ் வித்துவாணன் வாகரை வாணன் அவர்கள் ஆங்கிலம், இலத்தின் மொழிகளில் புலமை கொண்டவர். தழிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை ஆக்கிருப்பவர்.
தமிழர் தேசியச் சிந்தனையின் ஓயாத செயற்பாட்டாளர், ஒரு பொழுதும் தடம்மாறத சமூகப் பண்பாட்டு அரசியல் பயணம் அவருடையது. தமிழர் தேசிய சிந்தனையினதும் செயற்பாட்டினதும் அறிவு களஞ்சியமாகவும், சாட்சியாகவும் இருப்பவர்
“யாதும் ஊரே யாவரும் கேளீர்”; என்பதே அவரது வாழ்வின் தத்தும்.
இப்படியான பல மனிதர்களது வாழ்வும் போராட்டமும் ஈழத்தழிழர்களது சமூக அரசியல் சூழலில் குறிப்பாக தமிழ் தேசிய அரசியல் சூழலில் அவசிய அவசியமாக அறியப்பட வேண்டியது.
இந்தவகையில் வாகரை வாணன் அவர்களது மிக அண்மையில் வெளிவந்திருக்கும் நூல்தான் “எண்ணங்கள் ஆயிரம்”. அவரது ஜம்பத்தேழு ஆண்டுகால எழுத்துப் பணியில் வெளிவந்திருக்கும் நாற்பத்தி மூன்றாவது நூலாக மேற்படி நூல் அமைகின்றது. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆக்க இலக்கியங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும், கட்டுரைகளையும் எழுதிவரும் வாகரை வாணன் அவர்கள் பெரியவர்களை மட்டுமல்ல சிறுவர்களையும் அதிக கவனத்தில் கொண்டவராக இருக்கின்றார்.
- சுட்ட பொன் (கவிதைகள்) 1970
- எண்ணத்தில் நீந்துகிறேன் (கவிதைகள்) 1971
- பயணம் (கவிதைகள்) 1972
- துரோணர் சபதம் (நாடகம்) 1972
- தமிழ்ப்பாவை 1980
- கடற்கரைப் பூக்கள் (கவிதைத் தொகுப்பு) 1983
- ஊரடவரசந யனெ ஊiஎடைணையவழைn (ஆங்கிலக் கட்டுரை) 1989
- இனிக்கும் தமிழ் (கட்டுரை) 1989
- கிறிஸ்து தத்துவம் 1991
- சின்னச் சின்னக் கதைகள் 1991
- ஆசிரியன் ஓர் அட்சயப்பாத்திரம் (புதுக்கவிதைகள்) 1992
- அருளாளர் அந்தோனியார் (யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது) 1993
- ஒரு பூ மலர்கிறது (நாடகம்) 1993
- பாலர் தமிழ்ப்பாட்டு (சிறுவர் இலக்கியம்) (யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு பெற்றது) 1993
- கிறிஸ்து காவியம் 1995
- சின்னச் சின்னப் பூக்கள் (சிறுவர் இலக்கியம் – இலங்கை அரசின் இலக்கியப்பரிசு பெற்றது.) 1997
- சமயம் – சில சிந்தனைகள் (கட்டுரைகள்) 1997
- சிறு கதை விமர்சனம் 1997
- அரசி உலக நாச்சியார் (சிறுகதைத் தொகுப்பு) 1998
- புதுக்கவிதைப் புத்தகம் (புதுக்கவிதைகள்) 1998
- விசுவாசத்தின் புதிய விடியல் (தமிழ் மொழி பெயர்ப்பு) 1998
- தமிழர் வரலாற்றில் சில பக்கங்கள் 1999
- இன்ரநெற் தமிழ் (கட்டுரைத் தொகுப்பு) 1999
- ஆல ஊழரவெசல (ஆங்கிலக் கவிதை) 2000
- நீ வா நிலாவே (சிறுவர் இலக்கியம்) 2000
- சின்னஞ் சிறு கிளியே (சிறுவர் இலக்கியம்) 2000
- ஆய் தமிழ் (ஆய்வுக்கட்டுரைகள்) 2001
- வாகரை ஒரு வரலாற்றுப்பார்வை (வரலாறு) 2003
- நந்திக்கொடி (வரலாற்றுக் குறு நாவல்) 2004
- பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ் 2005
- இன்னாசியார் காவியம் 2005
- பனிச்சங்கேணி அரசி (வரலாற்றுச் சிறுகதைகள்) 2007
- கிழக்கிலங்கைத் தமிழகம் (வரலாறு) 2011
- மட்டக்களப்புக் காவியம் 2016
- வாகரை வாணனின் ஆய்வுக் கட்டுரைகள் 2017
- உரைநடை மற்றும் கவிதை 2017
- தமிழ்ப் பாவை தைப்பாவை 2017
- தமிழ் மண் மட்டக்களப்பு. 2019
- தலைநிமிர்ந்து நிற்கும் தமிழ் 2021
- சோளன்சேனையும் சேலைக்கிளிகளும் 2023
- எண்ணங்கள் ஆயிரம் (கட்டுரை) 2024
- ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைப் பிரகடனம் (மொழிபெயர்ப்பு)
- அன்பினால் மலர்ந்த பூ
(வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா-தமிழாக்கம்)
நிகழ்காலம் மட்டுமல்ல எதிர்காலத்திற்குமான சமூகப் பண்பாட்டு அரசியல் அறிவும் உணர்வும் கொண்ட சமூகங்களது உருவாக்கம் பற்றிய அடங்காத வெம்மையாக அவரது எழுத்தியக்கம் இருந்து வருகின்றது.
உலகத்தறிவும், தேசத்துத் தொல்லறிவும், உள்;ர் நுண்ணறிவும் கொண்ட சமூகங்களது உருவாக்கமும் அவரது நோக்கமாக இருந்து வருவதன் சாட்சியாக அவரது நூல்கள் திகழ்கின்றன.
களச்செயற்பாடுகளுக்கு முதன்மை கொடுத்து இயங்கிய, இயங்கிவரும் தலைமுறையின் இந்த எழுத்துக்கள் முழுநேர எழுத்தாளர்களது என்று எண்ணவைக்கும் வியப்பிற்குரியவை. இந்த தலைமுறைகளின் செயல்மைய அறிவெழுச்சியை உள்வாங்கிய ஆளுமைகளின் உருவாக்கங்கள் மாற்றங்களைச் சாத்தியமாக்கும்.
பேராசிரியர் சி. ஜெயசங்கர்


