Home இலங்கைமதப் புத்தகங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதில்அதிருப்தி

மதப் புத்தகங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதில்அதிருப்தி

by editorenglish

நாட்டிற்குள் மத புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து பொதுபல சேனா அரசாங்கத்திடம் நேற்று (11/03/2025) கேள்வி எழுப்பியது.

ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த  பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலைத் தொடர்ந்து புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க மேற்கண்ட முடிவை எடுத்ததாக கூறியுள்ளதாக தொிவித்துள்ளாா். .

முன்னதாக, உயிர்த்த‌ ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பிறகு நாட்டிற்கு மதப் புத்தகங்களை இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டதாக  தொிவித்த அவா்  “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னும் பின்னும் கூட பல சந்தர்ப்பங்களில், முந்தைய அரசாங்கங்களுக்கு இதை நாங்கள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டோம் எனவும் அவா் தொிவித்துள்ளாா்..

“இஸ்லாத்தின் தவறான விளக்கத்தின் மூலம் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் குறையாத சூழலில் இதுபோன்ற முடிவை எடுப்பது மிகவும் ஆபத்தானது. இரண்டு சந்தர்ப்பங்களில், இலங்கையில் பணத்திற்காக மக்களைக் கொல்வதற்காக ஏராளமான கொலைகார கும்பல்கள் செயல்படுகின்றன என்று நான் உறுதியாகக் கூறியுள்ளேன்,” என்று தேரர் கூறினார்.

மேலும், 1 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான இந்தப் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு USAID நிதியளித்ததாகவும், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் அச்சிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“இந்தப் பாடப்புத்தகங்கள், மனதை மாற்றும் திறனுள்ள நூலான குர்ஆனைத் தவறாகப் புரிந்துகொண்டு, உலகம் முழுவதும் மதப் பயங்கரவாதத்தைக் கட்டியெழுப்ப சித்தாந்தங்களை வழங்கிய, தற்போதைய இஸ்லாமியத் தலைவர்களின் கருத்துக்களைக் கொண்டுள்ளன. அவை ஒரு குழந்தைக்குக் கற்பிக்கக் கூடாதவை” என்று தேரர் கூறினார்.

“பாடப்புத்தகப் பிரச்சினையைத் தீர்க்காமல், அரசாங்கம் நாட்டிற்குள் மதப் புத்தகங்களை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது. இந்தப் பாடப்புத்தகம் இலங்கையில் உள்ள அப்பாவி மற்றும் பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தின் மனதை மாற்ற வழிவகுக்கும், மேலும் அவர்களை சஹ்ரான் ஹாஷிம் போன்றவர்களாக மாற்றும்” என்று தேரர் கூறினார்.

உயிா்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த சூத்திரதாரி பற்றிய விவரங்களைப் பெற அரசாங்கத் தரப்பிலிருந்து யாரும் தம்மைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஞானசார தேரர் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More