Home உலகம் தென்கொரியக் காட்டுத்தீயில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

தென்கொரியக் காட்டுத்தீயில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

by editorenglish

தென் கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் சுமார் 35,000 இலங்கைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

தென்கிழக்குப் பிராந்தியங்களில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயை அணைக்கத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More