359
7கிலோ 9 கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு சென்ற த தாய்லாந்து பிரஜை ஒருவா் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வருகைதரும் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது அவரது பயணப் பையில் போதைப்பொருளை மறைத்து வைத்து கொண்டு சென்ற நிலையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்மடுள்ளாா்.
கைது செய்யப்பட்ட 21 வயதான தாய்லாந்து பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த போதைப்பொருளின் பெறுமதி 79 மில்லியன் ரூபாவாகுமென சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Spread the love

