சட்ட விரோதமான முறையில் தமிழகத்திற்குள் சென்ற இலங்கை நபர் ஒருவர் ராமேஸ்வரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று (8) அதிகாலை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவு காவல்துறையினா் திடீர் சோதனை நடத்தினா். இதன் போது அருகே இருந்த பூங்காவில் சந்தேகத்துக்கிடமாக அமர்ந்திருந்த நபர் ஒருவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் இலங்கை பணம், இலங்கை கடவுச்சீட்டு, இலங்கை தேசிய அடையாள அட்டை ஆகியவை அவரது உடமையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ள கண்ணனின் மனைவியை பார்ப்பதற்காக வேதாரணியத்தில் இருந்து பேருந்தில் புறப்பட்டு ராமேஸ்வரம் பேருந்து நிலையம் வந்து இறங்கி மண்டபம் அகதிகள் முகாமிற்கு செல்வதற்காக பூங்காவில் அமர்ந்திருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாா்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட கண்ணனை காவல்துறையினா் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கண்ணன் மீது கடவுச்சீட்டு இன்றி சட்ட விரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினா் அவரை பரமக்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


