Home இலங்கைமதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100% அதிகரிப்பு!

மதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100% அதிகரிப்பு!

by admin
இன்று (டிசம்பர் 12) முதல் அமுலுக்கு வரும் வகையில், அனைத்து வகையான மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணங்களையும் அரசாங்கம் 100 வீதத்தால் அதிகரித்துள்ளது. 📈
கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வருடாந்த மதுவரி கட்டணம், தொழில் கட்டணத்திற்காக ஒருமுறை மட்டும் வசூலிக்கப்படும் கட்டணம் மற்றும் பாதுகாப்பு பிணைக் வைப்புத் தொகை என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த திருத்தங்களுக்கு அமைவான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் செலுத்தப்பட வேண்டும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More