Home இலங்கையாழ்ப்பாணத்தில் பரபரப்பு: காவற்துறையினரால் தாக்கப்பட்ட வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: காவற்துறையினரால் தாக்கப்பட்ட வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில் அனுமதி!

by admin
தையிட்டி விகாரைக்கு முன்பாக நடைபெற்ற அமைதி வழிப் போராட்டத்தின் போது, காவற்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளான சிவகுருப் பாபு சுவாமிகள் (வேலன் சுவாமி) தற்போது சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி:
நேற்று ஞாயிற்றுக்கிழமை தையிட்டி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவற்துறையினர் மிலேச்சத்தனமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்போது வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற நடவடிக்கை:
கைது செய்யப்பட்ட ஐவரும் நேற்று மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான், அவர்கள் ஐவரையும் பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.
வைத்தியசாலையில் அனுமதி:
பிணையில் விடுதலையாகி தனது ஆதீனத்திற்குத் திரும்பிய வேலன் சுவாமிக்கு, காவற்துறையினர் நடத்திய தாக்குதல் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அவசரமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
கண்டனக் குரல்கள்:
மதத் தலைவர் ஒருவரை காவற்துறையினர் வாகனத்தினுள் தூக்கி வீசியதும், அமைதியாகப் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் காட்டுமிராண்டித்தனமானது எனப் பல்வேறு தரப்பினரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகின்றது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More