202
பிடியாணை மற்றும் சரண்
ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்
தொடரும் சர்ச்சைகள்
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் தனிப்பட்ட பெண் உதவியாளர், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிமன்றில் நிலுவையிலுள்ள போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா முன்னிலையாகவில்லை. இதன் காரணமாக அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை (Warrant) பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, தனது தனிப்பட்ட பெண் உதவியாளருடன் கோட்டை காவல் நிலையத்திற்குச் சென்ற அவர் அங்கு சரணடைந்தார்.
இந்தச் செய்தி குறித்து அறிந்து, மேலதிக தகவல்களைச் சேகரிப்பதற்காக காவல் நிலையத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்களை, அருச்சுனாவின் பெண் உதவியாளர் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். கடமையில் இருந்த ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் இந்த அத்துமீறல் அமைந்திருந்தது.
இதேவேளை, நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு முன்பாகவும் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. அங்கு பிரதேச சபையின் இரண்டு பெண் உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் நாகரிகமற்ற முறையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.
அச்சமயத்திலும் குறித்த பெண் உதவியாளர் அருச்சுனாவுக்கு அருகிலேயே இருந்தார் என்பதும், மக்கள் பிரதிநிதி ஒருவரின் இத்தகைய செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love

