Home இலங்கை⚖️ காலி மாநகர சபை பெண் உறுப்பினர் உட்பட ஐவர் கைது!

⚖️ காலி மாநகர சபை பெண் உறுப்பினர் உட்பட ஐவர் கைது!

by admin

காலி மாநகர சபையில் நேற்று (டிசம்பர் 30) சபை அமர்வின் போது ஏற்பட்ட கடும் வாக்குவாதம் மற்றும் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் காலி மாநகர சபை பெண் உறுப்பினர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை அமர்வின் போது, உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பெரும் குழப்பமாக மாறியது. இதன்போது சபைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளின் பணிகளுக்குத் தடையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடா்பில் ஒரு பெண் உறுப்பினர் உட்பட மொத்தம் ஐந்து உறுப்பினர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவா். இவர்களிடம் காவல்துறையினா் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று (டிசம்பர் 31) காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பாக நிலவி வரும் இழுபறிகளே இத்தகைய மோதல்களுக்குக் காரணமாக அமைவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சபையின் மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்டதாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

Tag Words: #Galle #MunicipalCouncil #SJB #UNP #SLPP #GalleNews #PoliceArrest #PoliticalCrisis #SriLankaPolitics #TamilNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More