234
இதைக் கட்டுப்படுத்த முடியுமா? (2030 இலக்குகள்)
முக்கிய விழிப்புணர்வுத் தகவல்கள்:
ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள இந்தத் தகவல் உலகெங்கிலும் உள்ள பெண்களின் ஆரோக்கியம் குறித்த தீவிர எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி 2) ஐநா இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழக்கிறார் என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, இது தடுக்கப்படக்கூடிய ஒரு நோயினால் ஏற்படும் பேரிழப்பு என்பதே கவலைக்குாிய விடயமாகும். இந்தப் புற்றுநோயால் ஆண்டுதோறும் சுமார் 3,50,000 பெண்கள் உலகளவில் உயிரிழக்கின்றனர் (2022 தரவுகளின்படி). அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6,60,000 பெண்கள் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர்.
உயிரிழப்பவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகம். உலகளவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகளில் சுமார் 20% பாதிப்புகள் இந்தியாவில் ஏற்படுகின்றன (ஆண்டுக்கு சுமார் 1.27 லட்சம் புதிய பாதிப்புகள்).
கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது முற்றிலும் தடுக்கக்கூடிய மற்றும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய ஒன்றாகும். இதனை ஒழிக்க WHO “90-70-90” என்ற இலக்கை 2030-க்குள் அடையத் திட்டமிட்டுள்ளது.
90% தடுப்பூசி: 15 வயதிற்குட்பட்ட 90% பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி போடுதல்.
70% பரிசோதனை: 35 மற்றும் 45 வயதிற்குட்பட்ட 70% பெண்களுக்கு நவீன சோதனைகள் (Screening) மூலம் பரிசோதனை செய்தல்.
90% சிகிச்சை: நோய் கண்டறியப்பட்ட 90% பெண்களுக்குச் சரியான சிகிச்சை மற்றும் பராமரிப்பை உறுதி செய்தல்.
95 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் HPV (Human Papillomavirus) எனப்படும் வைரஸ் தொற்றால் ஏற்படுகின்றன.
தடுப்பு முறைகள்:
9 முதல் 14 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது சிறந்தது. திருமணமான பெண்கள் மற்றும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் முறையான Pap Smear அல்லது HPV DNA சோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். ஆரம்பகட்ட அறிகுறிகள் (சீரற்ற இரத்தப்போக்கு, இடுப்பு வலி) தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
Spread the love

