586
வெறும் 24 மணிநேரத்தில் அணு குண்டை உருவாக்கிவிடும் திறன் தன்னிடம் இருப்பதாக ஈரான் தற்போது பகிரங்கமாக அறிவித்துள்ளது. மேலும், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது மேற்கத்திய நாடுகள் ஏதேனும் தாக்குதல் நடத்தினால், அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என தெஹ்ரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் இறையாண்மையை குறிவைத்து நடத்தப்படும் வெளிநாட்டு சதித்திட்டங்களை சீனா வேடிக்கை பார்க்காது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரானைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து புலனாய்வுத் தகவல்கள் (Intelligence) மற்றும் தளவாட ஆதரவுகளை (Logistical Support) வழங்க சீனா முன்வந்துள்ளது.
நேற்றிரவு ஈரானிய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற குர்திஷ் துணை ராணுவப் படையினரை (PJAK பிரிவினைவாதிகள்) ஈரானிய இராணுவம் முறியடித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து வெளியாகியுள்ள அதிரடி தகவல்கள் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளன.
துருக்கியின் உளவு அமைப்பான MIT, இந்த பிரிவினைவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து ஈரானின் IRGC அமைப்புடன் உடனுக்குடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது.
இதன் விளைவாக, ஈராக் எல்லை வழியாக ஊடுருவிய பெரும்பாலான பிரிவினைவாதிகள் இலாம் (Ilam) மற்றும் கெர்மான்ஷா (Kermanshah) மாகாணங்களில் வைத்து கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள், குறிப்பாக ஈரான்-சீனா-துருக்கி ஆகிய நாடுகளின் இந்த நெருக்கமான ஒத்துழைப்பு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

