Home உலகம்“உதவி விரைவில் வரும்!” ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

“உதவி விரைவில் வரும்!” ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

by admin

உதவி விரைவில் வரும்!” ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு!

ஈரானில் நிலவும் அமைதியற்ற சூழல் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் தனது கடுமையான கண்டனத்தையும் ஆதரவையும் பதிவு செய்துள்ளார்.

“ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் – உங்கள் நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள்!” என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

போராட்டக்காரர்களைத் துன்புறுத்துவோர் மற்றும் கொலை செய்பவர்களின் பெயர்களைப் பட்டியலிடுமாறு கூறியுள்ள அவர், அவர்கள் இதற்காகப் பெரும் விலையைக் கொடுப்பார்கள் என எச்சரித்துள்ளார்.

தப்படும் வரை, ஈரான் அதிகாரிகளுடன் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சந்திப்புகளையும் (Meetings) தாம் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

“உதவி விரைவில் வந்து கொண்டிருக்கிறது” என்று உறுதியளித்துள்ள அவர், MIGA (Make Iran Great Again) என்ற புதிய வாசகத்தையும் முன்வைத்துள்ளார்.

ஈரானில் கடந்த சில நாட்களாக நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ட்ரம்பின் இந்த அறிக்கை, ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு இருக்கலாம் என்பதற்கான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.

#IranProtests #DonaldTrump #MIGA #IranianPatriots #HumanRights #IranCrisis #Trump2026 #FreeIran #Justice ForIran #BreakingNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More