194
இனிவரும் காலங்களில் AI மென்பொருட்களே தானாகவே கோடிங் எழுதும் திறன் பெற்றுவிடும். எனவே, கணினி மொழிகளைக் கற்றுக் கொள்வதை விட, அடிப்படை அறிவியல் விதிகளையும் தர்க்க ரீதியான சிந்தனையையும் வளர்த்துக் கொள்வதே சிறந்தது என்று ஜென்சன் ஹுவாங் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் மாணவர்கள் தொழில்நுட்பம் மாறினாலும், மாறாத அடிப்படை அறிவியலில் (Core Science) வலுவாக இருக்க வேண்டும். அதுவே வரும் காலங்களில் “AI-Proof” வெற்றியாளராக மாணவர்களை மாற்றும்!
செயற்கை நுண்ணறிவு (AI) அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், வருங்கால மாணவர்கள் எதைக் கற்க வேண்டும் என்பதில் உலகப் பெரும் கோடீஸ்வரர்களான எலான் மஸ்க் (Elon Musk) மற்றும் என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) ஆகியோர் ஒருமித்த கருத்தை வெளியிட்டுள்ளனர்.
“இயற்பியல் (Physics) மற்றும் கணிதத்திற்கு (Math) முன்னுரிமை கொடுங்கள்” என எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார். உலகின் அடிப்படை விதிகளைப் புரிந்து கொண்டால் மட்டுமே, AI தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பது அவர் கருத்து.
எதிர்காலம் என்பது ரோபாட்டிக்ஸ் மற்றும் நிஜ உலகோடு தொடர்பு கொள்ளும் AI சார்ந்தது. உராய்வு (Friction), நிலைமம் (Inertia) போன்ற இயற்பியல் காரணிகளை AI புரிந்து கொள்ள வேண்டுமானால், அதை உருவாக்கும் மனிதர்களுக்கு அந்த அறிவு அவசியம் தேவை.
முதல் கொள்கை சிந்தனை (First Principles Thinking): சிக்கலான பிரச்சினைகளை அதன் அடிப்படை உண்மைகளிலிருந்து அணுகும் முறையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு இயற்பியல் கல்வி ஒரு சிறந்த அடித்தளமாக அமையும்.
________________________________________
Spread the love

