161
COVID-19 பெருந்தொற்று காலத்தின் போது உலக சுகாதார அமைப்பு செயல்பட்ட விதம், சீனாவுடனான அதன் நெருக்கம் மற்றும் அமைப்பில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு (ஜனவரி 20, 2025) அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கான நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார். முறைப்படியான ஓராண்டு அறிவிப்பு காலத்திற்குப் பிறகு இந்த வெளியேற்றம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவு தடுப்பூசி திட்டங்கள், போலியோ ஒழிப்பு மற்றும் வளரும் நாடுகளுக்கான மருத்துவ உதவிகள் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என உலக சுகாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேநேரம், கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் இல்லினாய்ஸ் போன்ற சில அமெரிக்க மாநிலங்கள் WHO-வின் சர்வதேச நோய் கண்காணிப்பு நெட்வொர்க்குகளில் (GOARN) தனிப்பட்ட ரீதியில் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.
உலக சுகாதார அமைப்பில் (World Health Organization – WHO) இருந்து அமெரிக்கா இன்று (ஜனவரி 22, 2026) முதல் முழுமையாக வெளியேறியுள்ளதை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பிற்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா இருந்து வந்தது (சுமார் 15% – 20%). அமெரிக்காவின் வெளியேற்றம் அந்த அமைப்பின் உலகளாவிய செயல்பாடுகளில் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அமெரிக்கா இனி நேரடியாக மற்ற நாடுகளுடன் (Bilateral Engagements) சுகாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டு செயல்படத் திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு எங்களைப் பின்தொடரவும்! 
Spread the love

