Home உலகம்கிழக்கு பசிபிக் பகுதியில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல்!

கிழக்கு பசிபிக் பகுதியில் அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல்!

by admin
அமெரிக்காவின் SOUTHCOM (U.S. Southern Command) தளபதி ஜெனரல் பிரான்சிஸ் எல். டோனோவன் (Gen. Francis L. Donovan) அவர்களின் நேரடி உத்தரவின் பேரில், கூட்டுப் பணிக்குழு ‘சதர்ன் ஸ்பியர்’ (Joint Task Force Southern Spear), பிப்ரவரி 9 அன்று கிழக்கு பசிபிக் பெருங்கடலில் அதிரடியான தாக்குதலை நடத்தியது.
📍 பயங்கரவாத அமைப்புகளால் இயக்கப்படும் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு படகு தாக்குதல் இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படகு போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட கடல்வழிப் பாதையில் பயணிப்பது உளவுத்துறை மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்தத் தாக்குதலில் இரண்டு போதைப்பொருள் பயங்கரவாதிகள் (Narco-terrorists) கொல்லப்பட்டனர்; ஒருவர் உயிர் தப்பினார். தப்பிப்பிழைத்த நபரை மீட்கும் வகையில், அமெரிக்க கடலோர காவல்படையின் (U.S. Coast Guard) தேடல் மற்றும் மீட்புப் பிரிவை (SAR) உடனடியாகச் செயல்படுத்த SOUTHCOM அறிவுறுத்தியுள்ளது.
💡 அமெரிக்காவின் ‘ஒபரேஷன் சதன் ஸ்பியர்’ (Operation Southern Spear) என்பது மேற்கு அரைக்கோளத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றச் செயல்களை முறியடிக்கத் தொடங்கப்பட்ட ஒரு தீவிர ராணுவ நடவடிக்கையாகும். 2025-ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை அழிப்பதையும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
________________________________________
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More