மிட்லாண்ட்ஸில் (Midlands) வசிக்கும் ஒரு தம்பதியினர், சுமார் £3,000 (இலங்கை ரூபாயில் சுமார் 11 லட்சம்) செலவில் அமைத்த தோட்ட வேலியை (Garden fence), அது அனுமதிக்கப்பட்ட அளவை விட 78 செ.மீ (78cm) உயரமாக இருப்பதாகக் கூறி, அதனை அகற்ற உள்ளூர் சபை உத்தரவிட்டுள்ளது.
மிட்லாண்ட்ஸின் வோல்சால் (Walsall) பகுதியில் வசிக்கும் மார்க் மற்றும் சூசன் தம்பதியினர், தங்களின் பாதுகாப்பிற்காகவும் தனியுரிமைக்காகவும் (Privacy) இந்த வேலியை அமைத்தனர். சட்டப்படி, ஒரு பொது வீதியை ஒட்டியுள்ள வேலியின் அதிகபட்ச உயரம் 1 மீட்டர் (100cm) ஆக இருக்க வேண்டும். ஆனால், இவர்கள் அமைத்த வேலி 1.78 மீட்டர் (178cm) உயரமாக உள்ளது.
வோல்சால் கவுன்சில் (Walsall Council), இந்த வேலி வீதிப் பாதுகாப்பிற்கு இடையூறாக இருப்பதாகவும், சாரதிகள் வீதியைத் தெளிவாகப் பார்ப்பதைத் தடுப்பதாகவும் கூறி, அதனை அகற்ற அல்லது குறைக்க உத்தரவிட்டுள்ளது. தம்பதியினர் இதற்கு எதிராகப் பலமுறை மேன்முறையீடு செய்தும், திட்டமிடல் ஆய்வாளர் (Planning Inspector) சபையின் முடிவே சரியானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.
பிரித்தானியாவில் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வேலி அமைக்கும்போது, குறிப்பிட்ட அளவுகளை விட அதிகமான உயரத்தில் வேலி அமைக்க விரும்பினால், முன்கூட்டியே திட்டமிடல் அனுமதி (Planning Permission) பெறுவது அவசியமாகும். அவ்வாறு பெறத் தவறினால், எவ்வளவு செலவு செய்திருந்தாலும் அதனை அகற்ற நேரிடும்.
Tag Words:#UKNews #WalsallCouncil #GardenFenceLaw #PlanningPermission #HomeImprovement #MidlandsNews #PropertyRights #LKA

