Home இலங்கைஅரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே “பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்”

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே “பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்”

by admin

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் ஏற்பாடுகளுடன் அதனை கொண்டுவர முயல்கின்றனர் என முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்
  பயங்கரவாத தடை சட்டத்திற்க்கு எதிராக மக்கள் போராடிய போதும் , அதனையும் மீறி அந்த சட்டத்தை அமுல் படுத்தினர். பின்னர் அந்த பயங்கரவாத தடை சட்டத்தால் தற்போது ஆட்சியில் உள்ளவர்களும் பல இன்னல்களை எதிர்கொண்டனர்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்போம் என வாக்குறுதி வழங்கி தற்போது ஆட்சி அமைத்துள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக கூறி , தற்போது பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை அமுல் படுத்த முயல்கின்றனர். இது மிகவும் பயங்கரமான சட்டமாக வரவுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் போது . பயங்கரவாத தடை சட்டத்தினால் தடுக்க முடியாது. அதற்கு அந்த சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் போதாமையால் உள்ளதால் தற்போது , பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக அந்த போராட்டங்களை கட்டுப்படுத்தவே புதிய சட்டமூலத்தை கொண்டு வருகின்றனர்.என மேலும் தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More